ஜெனீவாவில் பிரித்தானிய ஒத்துழைப்புடன் இலங்கைக்கு கால அவகாசம்

ஜெனிவாவில் எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு நடைபெறும்போது இலங்கை தொடர்பிலான புதிய யோசனையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.

இதற்கான முடிவு நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது ஏற்பாட்டு கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டது.

இந்த யோசனையின்படி இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்து மேலும் காலஅவகாசம் வழங்கப்படவுள்ளது. இந்த யோசனைக்கு முன்னதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 27 முதல் மார்ச் 27வரை நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான யோசனை மார்ச் 22ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen