கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளில் ஆக்கிரமித்து தங்கியிருந்த இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை வெளியேறியுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் முகாம்களை அமைந்திருந்தது.

தமது காணிகளை மீளவும் வழங்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இன்று இராணுவம் காணிகளிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு காணிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen