27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்

27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஐரின் க்லேனல் என்ற பெண் இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள தனது வீட்டில் வைத்து அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து, முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டவருடன் திருமணமாகியதன் பின்னர் ஐரின் க்லேனலுக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ அனுமதி கிடைத்துள்ளது. எனினும் அவர் தனது வயோதிப பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீண்ட காலம் தங்கியிருந்ததன் காரணமாக அவரது குடியிருப்பு விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவினுள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கு பல முறை முயற்சித்ததாக ஐரின் க்லேனல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் குடியுரிமை கோரும் ஒவ்வொருவரினதும் விண்ணப்பமும் தற்போது தனித்தனியாக ஆராய்வதாக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
யாருக்கும் சட்டரீதியாக நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லை என்றால் அவர்களை வெளியேற வேண்டும் என்பது தங்கள் எதிர்ப்பார்பென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பெருமளவு இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தங்கள் உறவுகளை பார்ப்பதற்காக நாட்டுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen