ஐ.நா.உடனடியாக தலையிடவேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரிவிப்பு
எமது கண் முன்னே இராணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மிகுந்த ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்
.
தமது உறவுகளைப் பிடித்துச் சென்று விட்டு தற்போது காணவில்லை எனக்கை விரி க்கும் அரச படைகளும் அவற்றிற்குத் துணை நின்று செயற்படும் இலங்கை அரசும் எமது உறவுகள் எங்கே உள்ளார்கள்? என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என்றும் அம்மக்கள் கோரியுள்ளனர்.
காணதமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிவிக்குமாறு வலியுறுத்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள். ஆறாவது தினமாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
எமது கண் முன்னே எமது உறவுகளைப் பிடித்துச் சென்ற இலங்கை இராணுவமும் இராணுவத் துணைப் படையினரும் அவர்களை எங்கே ஒழித்து வைத்துள்ளார்கள் என்ற விபரத்தை வெளியிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். எமது உறவுகள் எங்கே உள்ளார்கள் என்பதனைக் கண்டறிந்து வெளியிடுவதற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்தாது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். எமது உறவுகள் எங்கே அரச படைகளால் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்துவார்களாகவிருந்தால் எமது போராட்ட வடிவங்கள் எதிர்காலத்தில் மாறும் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமும் ஐ.நா சபையுமேதான் ஏற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு அந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் நியாயமான போராட்டத்திற்குத் தாம் தொடர்ந்தும் ஆதரவாக இருந்து குரல்கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் அரசு பாராமுகமாக இருந்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் இவ்விடயத்தில் ஐ.நா சபை தகுந்த முறையில் தலையிட்டு இம்மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்
எமது கண் முன்னே இராணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மிகுந்த ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்
.
தமது உறவுகளைப் பிடித்துச் சென்று விட்டு தற்போது காணவில்லை எனக்கை விரி க்கும் அரச படைகளும் அவற்றிற்குத் துணை நின்று செயற்படும் இலங்கை அரசும் எமது உறவுகள் எங்கே உள்ளார்கள்? என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என்றும் அம்மக்கள் கோரியுள்ளனர்.
காணதமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிவிக்குமாறு வலியுறுத்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள். ஆறாவது தினமாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
எமது கண் முன்னே எமது உறவுகளைப் பிடித்துச் சென்ற இலங்கை இராணுவமும் இராணுவத் துணைப் படையினரும் அவர்களை எங்கே ஒழித்து வைத்துள்ளார்கள் என்ற விபரத்தை வெளியிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். எமது உறவுகள் எங்கே உள்ளார்கள் என்பதனைக் கண்டறிந்து வெளியிடுவதற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்தாது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். எமது உறவுகள் எங்கே அரச படைகளால் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்துவார்களாகவிருந்தால் எமது போராட்ட வடிவங்கள் எதிர்காலத்தில் மாறும் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமும் ஐ.நா சபையுமேதான் ஏற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு அந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் நியாயமான போராட்டத்திற்குத் தாம் தொடர்ந்தும் ஆதரவாக இருந்து குரல்கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் அரசு பாராமுகமாக இருந்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் இவ்விடயத்தில் ஐ.நா சபை தகுந்த முறையில் தலையிட்டு இம்மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்
0 Kommentare:
Kommentar veröffentlichen