முடிந்த கதையல்ல…….!!!


கயவனவன் காலம் காலமாய்  அரங்கேற்றிய இனச்சுத்திகரிப்பு
படுகொலைக் களத்தில்  ஆயுதங்கள் அடிமையாக்க

குருதி தவிர வேறேதும் கண்டிராத மரண ஓசை ஒலிக்க

சிங்கள இனவெறியரால்  எமதினம் திட்டமிட்டு அழிப்பு….!!!


நேரம் காலம் எதுவுமின்றி பாவமறியா எம்மவரை

மெய் நடுங்க நெஞ்சு பிளக்க தேகம் துடிக்க

நித்தம் நித்தம் மரணங்கள்

நெஞ்சில் பாயும் ரணங்கள்

எறிகணை வந்துவிழுந்தது இரக்கமின்றி

எம்மவர் உயிர்களை குடித்தது….!!!


கொத்தணிக் குண்டுகள் கொத்துக் கொத்தha;

குடும்பங்களை கொண்றழித்தது

இரசாயனக் குண்டுகள் வீழ்ந்து எரித்தது

வானை  கிழித்து ஏவுகணைகள் பறந்தது

வீழ்ந்தொழுகும் மின்னல் வெளிச்சத்தில்

மனிதம் செத்து மானுடம் மடிந்தது


பல்குழல் எறிகணை தொடர்ந்தது  அங்கே!

கூக்குரல் சத்தம் கேட்டுக் கேட்டு

வளியது  இறுக்கிய காதுகள்

குளமாகிவிட்ட கண்கள்

உதிர வெள்ளத்தில் குளித்துக் குளித்து

உருகி கருகிய உடல்கள்

தெய்வங்கள் நடந்த தேசவீதியில்

சாத்தான்கள் உலாவிய நேரமது….!!!


காம வெறி கொண்டு இச்சைதனை தீர்க்க

கை கால் கட்டப்பட்டு ஒட்டுத் துணியின்றி

சுடு மணலில் துடிதுடித்து கிடக்கையில்

இரக்கமில்லா இனவெறி அரசின்

வெறியாட்டத்தில் விளைந்த வேதனை…!!!



இவர்களும் வித்தியாச மனிதர்கள் தானே

எத்தனை மகான்கள் எத்தனை மன்னர்கள்…!!!

எத்தனை புத்திஜீவிகள் அன்று வாழ்ந்த

இந்தப் பூமியில்  உயிர்கள் துடிக்குது

உணர்வுகள் வெடிக்குது …..!!!


புத்தன் வழி வந்த புத்தி ஜீவிகளே….!!!

காலம் காலமாய்க் காடைத்தனம்

கட்டு அவிழ்த்து விட்ட கயவர்களே

முள்ளி வாய்க்கால் முடிந்த கதையல்ல தொடரும் கதை …..!!!

பீனிக்ஸ் பறவைகளாய் எழுந்து போராடும் கதை

உயிரும் உணர்வும் மண்னைவிட்டு ஒதுங்க மறுக்கும்கதை……!!!



நன்றி  தமிழ்லீடர்

- நிஜத்தடன் நிலவன்

0 Kommentare:

Kommentar veröffentlichen