வெளியாகியது இலங்கையின் இருட்டறை ஆவணப்படம்(காணொளி)

வதைகள்
தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka )இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர். எதிர் வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களில் பலர் இந்த ஆவணப்படத்திற்கு வாக்குமூலங்ளை வழங்கியுள்ளனர். அதில் பெற்ரோலால் நனைக்கப்பட்ட பொலுத்தீன் பைகளால் முகங்களை மூடி தாக்ப்பட்டவர்களும்,அசீட் ஊற்றி தாக்கப்பட்டவர்களும், நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களும், முள்ளுப்பற்றைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் உழவு இயந்திரம் மூலம் கட்டி இழுக்கப்பட்டவர்களும், வீட்டில் தங்கியிருந்தபோது பிள்ளைகளுக்கு முன்பாக தாயை நான்கு பேர் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதை நேரில் பார்த்த பிள்ளைகள் என பலர் தமது உள்ளக்குமுறல்களை இந்த ஆவணப்படத்தில் வெளிப்டுத்தியுள்ளனர்.


ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் ஏனையோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 Kommentare:

Kommentar veröffentlichen