யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது —

யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐ.நா  மனித உரிமைப் சபையின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen