திருமதி புனிதா யோகேஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.03.17

முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ்அவர்கள் இன்று  தனது பிறந்தநாளை கணவர் குமாரு. யோகேஸ் மகன்நெடுஞ்செழியன்,   மகள் மகிழினி .உற்றார் ,உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுகின்றார்,

 இவர்வாழ்வில்
சிறந்தோங்கி
இன்புற்று வாழவும்
பண்புற்ற குடும்பத்தலைவி திருமதிகுமாரு. யோகேஸ் அவர்களை

வாழ்க வாழ்க என வாழ்த்தும் இவ்வேளை ஈழத்தமிழன்  இணையமும்வாழ்த்தி நிற்கின்றது அத்தோடு இவரை   கணவர் குமாரு. யோகேஸ்
வாழ்த்திய வாழ்த்து கீழ் இணைக்கப்படுகின்றது

எனது வாழ்க்கை துணைவிக்கு இன்று.23.3.2017. பிறந்தநாள். பூக்களும் வர்ணமும் சேர்ந்து தொடுத்த நந்தவன தேருக்கு.. இன்று பிறந்த நாள்.
கல்லும் உளியும் சேர்ந்து வடித்த சிற்பத்திற்கு... இன்று பிறந்த நாள்.
தமிழும் இலக்கணமும் சேர்ந்து எழுதிய கவிதைக்கு...
இன்று பிறந்த நாள்.
இசையும் குரலும் சேர்ந்து படித்த பாட்டுக்கு...
இன்று பிறந்த நாள்.
கடலும் காற்றும் சேர்ந்து கொடுத்த அலைக்கு...
இன்று பிறந்த நாள்.
சந்திரனும் சூரியனும் அளித்த ஆலோசனைப்படி இந்திரன் படைத்த
என் அழகு சுந்தரிக்கு.. இன்று பிறந்த நாள்
என் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து,
உயிரின் உருவமாய் நிற்கும் என் மனைவிக்கு..
இன்று பிறந்த நாள்
என் இனியவளே உனக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. என்றும் உன்னை என்னுள் வைத்திருக்கும் உன் இதயம்.

0 Kommentare:

Kommentar veröffentlichen