செந்தமிழரின் குருவிக் கூட...!

சின்ன அலகால் ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து
சேர்த்துக் கட்டிய ..
செந்தமிழரின் குருவிக் கூடு அது..
அண்ணனும் தம்பிகளும் தங்கைகளும் சேர்ந்து
அல்லும் பகலும் அரும்பாடுபட்டு
அமைத்த நம் நாடு அது..

தண்ணீர் விட்டா வளர்த்தோம்..
தமிழ் ஈழம் என்னும்பெரு மரத்தை..
இல்லை ஐயா..எம்முடலில் ஓடும்
செந்நீரை விட்டல்லவா வளர்த்தோம்..?
சிறு நொடியில் பனிநீராய் அது
சிதைந்து கரைந்த மாயமென்ன?

வீணீர் வடிக்கும் வெறிநாய்க் கூட்டமது
வந்தொருநாள்
தாய்வழி வந்த நம்நிலத்தைச் சிதைத்ததே
விடலாமா இனியும்?
காணீர்..நம் கல்லறையில் உறங்கிய
மாவீரத் திலகங்கள் எங்கே?
கண்ணீர் ஆனது
புண் நீராய் வடியுதையா இதை நினைத்தால்!

இயந்திரங்கள் மூலம் எழும்பெலும்பாய்
நொறுக்கினரே பாவியர் ..
எம்மினத்தின் இளந்தளிர்கள் உறங்கிய
மாவீரர் துயிலுமில்லம் எல்லாம்..
மாயமாய் மறைந்ததெங்கே நம் மண்ணைவிட்டு..?
ஓயுமோ இதை நினைத்தால்
ஊழிக் காலம்வரை நம்மழுகை?

பிரபாகரன் என்போன்..
புலி என்றே நீ அறிவாய்
இல்லையடா.. அவனோர் பிரளயம் ..
எப்போது.. எப்படி..
அது வரும் என்று.. உன் அப்பனுக்கும்…
அப்பனின் அப்பனுக்கும்..
அது தெரியாது.. ..
காத்திருந்து பார்..நிச்சயம் அதுவரும்!

கரையோடு மோதும் பேரலைகள் ஓர்நாள்
கரையை உடைத்து
கனலோடு பாய்ந்துவரும்..
காத்திருங்கள் ஓநாய்களே!- மண்
வெறியோடு வாழும் நம்மினத்து
இளைஞர்கள் விடுவரோ?
விதியோடு மோதும் விளையாட்டை
புலிகளன்றி வேறு யாரும்
அறியார் …என்பதை .விளங்கிக் கொள்ளுங்கள்!

0 Kommentare:

Kommentar veröffentlichen