கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு நியமனத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்!

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னாவினால் இன்று (22.02.2017) கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆதரித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்திற்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் முகாமைத்துவ உத்தியோகஸ்தர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வளரிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்ற உடனேயே அவற்றை நிரப்புவதற்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போது பட்டதாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நியமனங்களுக்காக காத்திருப்பதுடன், அவர்களுள் பலர் தமது உரிய வயதைக்கடந்தும் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பட்டதாரிகளை இணைத்து கொள்ளும் வயதெல்லையை இம்முறை ஆசிரியர் நியமனத்தின் போது பட்டதாரிகளின் கோரிக்கைக்கு அமைய 40 ஆக மாற்றியுள்ளதாகவும் அதனை 45 ஆக மாற்றுவதற்கான முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமன்றி பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை நாம் கையில் வைத்துக் கொண்டு கொடுக்காதது போலவும் நாம் பட்டதாரிகளின் நியமனங்களை தடுப்பது போலவுமான ஒரு மாயையை அரசியல் சுயலாபத்துக்காக மேற்கொண்டு வருவதாகவும் போலி பிரசாரங்களை பரப்புவதை விடுத்து பட்டதாரிகளுக்கான விடியலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டு.

பட்டதாரிகள் படும் வேதனைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையில் தமது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் அவர்களுக்கு தம்மால் இயன்றவை அனைத்தையும் செய்வதற்கு தாமும் அமைச்சரவை வாரியமும் முழு முயற்சிகளை எடுத்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனங்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் புதிய ஆளணிகளை உருவாக்குவதற்குமான முழுமையாக அதிகாரங்கள் தம்மிடம் வழங்கப்படுமாயின் அதற்குரிய செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க தாம் காத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றை மாயையே உருவாக்கப்பட்டுள்ளதேயன்றி உண்மையில் தமது கைகள் கட்டிப் போடப்பட்ட நிலையே காணப்படுவதுடன் இந்த நிலையை மாற்றுவதற்கு குரல் கொடுக்க வேண்டிய சிறுபான்மையின அரசியலவாதிகள் பலர் இன்று அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்ற போர்வையில் பேசிவருவகின்றனர்.

எனவே இந்தப் பட்டதாரிகளின் பிரச்சினைகளில் ஏற்கனவே மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம் உள்ள நிலையில் பரீட்சையில் சித்தியெய்திய அனைத்து பட்டதாரிகளுக்கு வெற்றிடங்களுக்கு உள்ளீர்ப்பதற்கு இன்று பாரியதொரு போராட்டத்தை அதிகாரத்தில் உள்ளவர்களே முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது.

எவ்வாயினும் தமது பதவிக் காலத்திற்குள் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் அதற்கு எந்த எல்லையை வேண்டுமானலும் தொடுவதற்கு தாம் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவே நியமனங்கள் தொடர்பான அநேக தீர்மானங்களை எடுப்பதுடன் அது தொடர்பான பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினைக் காணப்படுவதுடன் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்னெடுத்து வருவதுடன் தற்போது நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நீர்வழங்கல் அமைச்சர் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கமினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டிள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen