நல்லாட்சி என்கிறார்களே அது எது ?

நல்லாட்சி என்கிறார்களே அது எது ? எமது அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் ?

24 ஆவது நாளாக கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம்..
பரவிப்பாஞ்சான் மக்கள் 4 வது நாளாக போராட்டம்..

புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 21 வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது...

கிளிநொச்சி காணாமல் போனோர் தொடர்பான போராட்டம்..
இப்படியாக தொடர் போராட்டங்கள் ஈழத்தில்..
தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இது.. பேருக்கு தான் நல்லாட்சி.. ஆனால் தமிழர்களுக்கோ என்ன ஆட்சி ?

கூட்டமைப்பினர் என்ன செய்கிறார்கள் ? ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்னையை ஏன் இவ்வாறு பண்ணுகிறார்கள் ? தமிழ் அரசியல் வாதிகள் இதை வைத்து அரசியல் பண்ணுவதற்காகவா இந்த தாமதம்..
நீங்கள் தாமதிக்கலாம் ஆனால் மக்கள் தாமதிக்க மாடார்கள்.. கொதித்தெழுந்து வீதிக்கு வந்த மக்கள் எதையும் செய்ய துணிவார்கள்..

0 Kommentare:

Kommentar veröffentlichen