தமிழீழத்தின் விடுதலைத் தாகத்தை விதைத்த ஏஞ்சிய குரல் ஒன்று நம் மண்ணில் விதையாகிது !!

சாந்த முகத்தோனே – உன்
செளக்கியம் கரைந்ததாலே
தவிக்கின்றோம் தாங்கமுடியாமலே
ஈழத்தின் போர்களத்திற்கே - உன்
இழக்காத வலிமை சேர்க்கும்
இதயம் தொட்ட கானம்
இதயத்தின் இசை நின்றதாலே
இடிந்து துவழ்கின்றோமே
வீரக்குரலின் வித்தகனே - உன்
மேடைக்குரல் கேட்க
காத்திருப்போர் பலரும் உண்டே
காந்திருந்த கண்களுக்கெலாம்
காட்சி இல்லா கலங்குகின்றோமே
விடை பெறும் காலம் வந்ததேனோ
விதி உனை கூட்டி சென்றதேனோ
விழி மடல் விரிந்து விம்மியே
வழி அனுப்புகின்றோம் அண்ணனே
வீர வணக்கம் ஈழத்தின் குரலே !!!

0 Kommentare:

Kommentar veröffentlichen