விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் வட மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தான அமைப்பு என பொது
பல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்கிய பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது. பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது.
எனினும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மிகவும் தீவிரமாக சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக கூறினாலும் வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்களின் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது. கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தயடிக்கின்றனர்.
குறைந்தது பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்த அனுப்பும் சிங்கள மொழியிலான கடிதங்களைக் கூட குப்பைத்தொட்டிக்குள் போடும் நிலைமை வடக்கில் காணப்படுகின்றது. இராணுவம் மீட்டெடுத்த இந்த அன்னை பூமியை பத்திரம் ஒன்றில் எழுதிக்கொடுக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை. இராணுவம் இருக்கும் வரை அது கனவிலும் நடைபெறாது.“ எனக் குறிப்பிட்டார்.
கொழும்பு – புறக்கோட்டையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்கிய பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது. பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது.
எனினும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மிகவும் தீவிரமாக சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக கூறினாலும் வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்களின் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது. கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தயடிக்கின்றனர்.
குறைந்தது பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்த அனுப்பும் சிங்கள மொழியிலான கடிதங்களைக் கூட குப்பைத்தொட்டிக்குள் போடும் நிலைமை வடக்கில் காணப்படுகின்றது. இராணுவம் மீட்டெடுத்த இந்த அன்னை பூமியை பத்திரம் ஒன்றில் எழுதிக்கொடுக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை. இராணுவம் இருக்கும் வரை அது கனவிலும் நடைபெறாது.“ எனக் குறிப்பிட்டார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen