கேப்பா புலவு!கவிதை ஜெசுதா யோ

முல்லைத்தீவு கேப்பாபுலவு
நிகழ்கால கொடூரம்
அடக்குமுறையின் உச்சம்
அதனால் வெடித்த போராட்டம்
அநீதி துயரம் இளைத்த
படுகொலைகள் நடந்த
கல்லறைமேடது..
கயவர்கள் அதனை மறைக்க
பெரும் பாடு…
முல்லிவாய்க்காலின் முடிந்துபோன
எம்சொந்தங்களின்
துயர்சுமந்த சுடுகாடு..
உயிரோடும் பிணமாகவும்
காவுவாங்கிய கல்லறையின்றி
சுடலைகள்..
ஐநாவுக்கு உண்மைநிலை மறைக்க
அரசு நடத்தும் நாடக அரங்கு…
அதியுயர் பாதுகாப்பு மையமென
கண்கட்டி வித்தைகாட்டுது…
உலகம் வந்து தோண்டினால்
சிதைந்த எம் உடலங்களின்
எச்சங்கள் மறைக்க போட்ட கூப்பாடு..
விமானப்படையின் முக்கிய தளமா..??
வீழ்ந்தஎம்மறவர்களின் புதைக்கப்பட்ட
வரலாற்று இடமன்றோ அது..!!
சொந்தமண்ணில் இருந்து
வேர்பிடுங்கி எறிய நாம் என்ன
நாதியற்றவர்களா???,
வீடும் வயலும் தோட்டமுமென
சொந்த உழைப்பில் வாழ்ந்த
அடங்கபற்றுக்கொண்ட தமிழனடா..!!
கசந்து போன வாழ்வின்
மிச்சங்களாக இன்னும்
வாழந்துகொண்டிருக்கிறோம்
சிதைந்த முகத்தோடு
மரணஓலத்தில் இன்னும் நாங்கள் …?
உலகம் அறிந்திடாத உண்மையிது…!?
குருதி படித்த மண்
இறுதியுத்ததின்
போரும்மரணமும்
நிறைந்த எம் இடம்
கண்ணீரோடு கரையேற
நினைக்கிறோம்..!?
இழந்தவை மீட்டிடமுடியாது
இருப்பதை இழந்திட முடியாது
வாழநினைப்பதையும் தடுத்திடமுடியாது
இது எங்கள் சொந்தநிலம் என்பதையும்
இல்லையென்று சொல்லிட முடியாது..!!
சிறுகச் சிறுகச் சேர்த்தவை
அழிந்திட விடமுடியாது
எங்கள் பூமியின் எல்லைக்குள்
தோட்டந்துரவு வீடுவாசல்
இழந்து நாம் நின்றிட முடியாது..??
இது எங்கள் உரிமைக்கான போராட்டம்
ஆயுதமின்றி எம்முடலினைவருத்தி
ஆளும் அராஜகத்திடம்
தட்டிக்கேட்கிறோம்
மனித பிணங்களைத்தின்ற
உங்களுக்கு இன்னும் பசி போகல்லயா…???
குஞ்சும் குழந்தையுமாய்
பெண்களும் குமருகளுமாய்
தெருவில் வாழ்கிறோம்
திக்கற்று நாங்க
திணறுகிறோம்…!!
உணவின்றி நீரின்றி
போனாலும்
எங்கள் உயிர் தான்
இழந்தாலும்
கடைசி உயிர்வாழக்
காத்திருக்கிறோம்
சொந்த நிலத்தில்
சோறாக்கி உண்ணவே
இந்த நிலைமறந்து வாழ்கிறோம்..!!
நீதியே உனக்கு கண்ணில்லையா
எம் கவலைகள் உனக்கு புரியல்லையா
உலகமே உனக்கு எம்மை தெரியல்லையா
உணவின்றி உறக்கமின்றி வாடுகிறோம்
உதவிட வழியில்லையா…//

0 Kommentare:

Kommentar veröffentlichen