12 ஆயிரம் விடுதலைப்புலிகள்: மீளுருவாக காரணம் மஹிந்த கோத்தா..!
புலிகளின் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுமே காரணம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொல்ல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதை புலனாய்வுப்பிரிவினர் தடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது முயற்சியாக இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன் தொடர்புபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
புலிகளின் மீள் உருவாக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருவதாகும் நாம் ஆரம்பத்தில் இருந்தே எச்சரிக்கையை விடுத்தோம்.
யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் நாட்டில் புலிகள் கொல்லப்பட்டு விட்டனர். இனிமேலும் புலிகளின் நடவடிக்கைகள் இருக்காது என கூறிய நிலையில் நாம் அதை எதிர்த்தும் வந்தோம்.
இலங்கையில் இருந்த 12 ஆயிரம் புலிகளை அரசாங்கம் விடுதலை செய்தது. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ் போன்ற இடங்களில் இவர்கள் தற்போது மீளுருவாக்கம் தொடர்பில் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இவ்வாறான புலிகள் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகளின் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுமே காரணம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொல்ல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதை புலனாய்வுப்பிரிவினர் தடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது முயற்சியாக இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன் தொடர்புபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
புலிகளின் மீள் உருவாக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருவதாகும் நாம் ஆரம்பத்தில் இருந்தே எச்சரிக்கையை விடுத்தோம்.
யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் நாட்டில் புலிகள் கொல்லப்பட்டு விட்டனர். இனிமேலும் புலிகளின் நடவடிக்கைகள் இருக்காது என கூறிய நிலையில் நாம் அதை எதிர்த்தும் வந்தோம்.
இலங்கையில் இருந்த 12 ஆயிரம் புலிகளை அரசாங்கம் விடுதலை செய்தது. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ் போன்ற இடங்களில் இவர்கள் தற்போது மீளுருவாக்கம் தொடர்பில் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இவ்வாறான புலிகள் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen