தவறான மருந்து கொடுத்து சிறுமியைக் கொன்ற யாழ்ப்பாண பவர்ஸ்ரார் சேத்திரபாலன்!! (Videos) Share


குறித்த சிறுமி கீரிமலைப் பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த சமயம் வாந்தி எடுத்ததால் அது தொடர்பாக சிறுமியின் தந்தைக்கு குறித்த பாடசாலை ஆசிரியை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையான ATLANTA  மருத்துவமனைக்கு வைத்தியர் சேத்திரபாலனிடம் கொண்டு சென்றார்

அங்கு சிறுமி பரிசோதிக்கப்பட்டு சிறுமிக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மருந்தை உட் கொண்ட சிறுமியின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் சிறுமியை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் பெற்றோர். ஆனால் சிறுமி உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேத்திரபாலனின் வைத்தியசாலையில் கொடுத்த மருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தெல்லிப்பளை வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த மருந்தே குழந்தையின் உயிரைப் பறித்ததாக   தெரிவித்துள்ளன.

ஆனால் மரணவிசாரணை அதிகாரி குறித்த விடயத்தை மறைத்து சிறுமி சத்தி எடுக்கும் போத குடல் முறுக்குப்பட்டதாக பொய் சொல்லி சிறுமி இறந்த காரணத்தை மறைத்துவிட்டதாகவும் இதற்கு வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி சேத்திரபாலனிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்ப்டுகின்றது.

இதே வேளை சேத்திரபாலனின் வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிகள் அனுபவமற்றவர்கள் என்பதும் அத்துடன் அழகான பெண்களை தாதிகளாக தெரிவு செய்வதில் மட்டும் குறியா இருப்பதாகவும் ஆயுள்வேத மருத்துவம் படித்த ஒரு பெண் மருத்துவரும் அங்கு பணி புரிந்து தவறான ஆங்கில மருந்துகளை வழங்குவதாகவும்  வைத்தியத்துறையைச் சேர்ந்த சிலர் தெரவித்துள்ளனர்.
இவனைப் பற்றி நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்திக்கு இங்கே அழுத்தவும்


சேத்திரபாலனின் ATLANTA வைத்தியசாலையில் நோய் மாறுவதற்காக சிகிச்சை எடுக்கச் சென்ற பலர் சிறுநீரக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் இ்டம்பெற்றுள்ளன. சேத்திரபாலன் தன்னிடம் வரும் நோயாளர்களுக்கு உடனடியாக நோயை மாற்றிக் காட்டி நோயாளர்களிடம் இருந்து பாராட்டும் புகழும் பெறுவதற்காக மிகவும் அதி  பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து உடனடியாக வலியை மாற்ற வைப்பதிலேயே குறியாக உள்ளதாகவும்

0 Kommentare:

Kommentar veröffentlichen