தீவகத்தின் புண்ணிய பூமிக்குள் கடத்தி வரப்பட்ட கேரள பத்து கஞ்சாப் பொதிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில், புதன்  அதிகாலை பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து -பொலிசாருடன் கிராம அலுவலர்கள் சிலர்  இணைந்து பத்து  கேரள கஞ்சாப்பொதிகளை   மீட்டிருப்பதாக  நயினாதீவிலிருந்து நிழற்பட ஆதாரத்துடன்  எம்.குமரன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பத்து கஞ்சாப்பொதிகளின் நிறை சுமார் 51 கிலோ வரை  இருப்பதாகவும்-ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதிக்கு, இந்தியாவிலிருந்து கஞ்சாப் பொதிகள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதுடன் -மாணவர்கள் மத்தியில் கஞ்சா பாவனையும் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen