மனித உரிமைப் பேரவையை இலங்கை உதாசீனப்படுத்துகிறது : மெக்டொனெல்

ஐ.நா. கூட்டத்தொடரில்  இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனெல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வுகளை சமாளிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ள அவர், உள்ளக விசாரணைகளை நடத்த அனுமதிக்கக் கூடாதெனவும், அவை நேர்மையான விதத்தில் ஒருபோதுமே அமையப் போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen