இராணுவத்திடம் சரணடைந்த எழிலன் மற்றும் அருட்தந்தை பிரா ன்ஸில் ஜோசப்
உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறு திக்கட்ட போரின் போது இராணுவத்தினரிடம்
சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்
புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும்
சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்
உள்ளிட்ட பன்னிரண்டு தமிழர்களின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம்மாதம்
30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான்
நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை
விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்,
நேற்றைய தினம் இந்த வழக்கிற்கு சமுகமளிக்க வேண்டிய ஓய்வுபெற்ற மேஜர்
ஜெனரல் சாணக்க குணவரத்தன நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு
விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்
சார்பில் அவரது மனைவியான வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன்
உட்பட கிருஷ்ணகுமார் ஜெய குமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி,
கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் தமது வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் சார்பில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்
திருந்தனர்.
இந்த வழக்கு, கடந்த 2016, ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு
விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி
உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை
நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் இராணுவத்தினர் தரப்பில்
தெரிவித்திருந்தனர்.
எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த யூலை மாதம் 14ஆம் திகதி
நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பி னர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுதலை
செய்யப்பட்டதாகவும் அவர்களின் விபரம் மட்டுமே தங்களிடம் உள்ளதாக
தெரிவித்து மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட
ஆவணத்தை முல் லைத்தீவு மாவட்ட நீதிவான் ஏற்றுக் கொள்ளாது நீதிமன்றம்
மறுத்திருந்தது.
இதேவேளை, குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக
அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்
அவர் நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காமையால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen