4 வது நாளாக தொடரும் உண்ணாநிலைப் போராட்டம் கவலைக்கிடமாக கிடக்கும் ஈழத்தமிழ் உறவுகள்.


இந்தோனேசியாவில் ஈழத்தமிழர்கள் அகதி அந்தஸ்து வழங்கப்படாமையும் மற்றும் பல ஆண்டுகளாக அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் மீள் குடியேற்ற நாடுகளுக்கு குடியேற்றப்படாமலும் தமது எதிர்கால வாழ்வைத் தொலைத்து வருகின்றனர்.

மற்றைய நாட்டவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஈழத்தமிழர்களுக்கு புறக்கணிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழர்களும் மனிதர்கள் தானே இவர்களும் வாழ்வைத்தொலைத்து அகதிகளாக அடைக்களம் கோரியவர்கள் தானே..
ஏன் இந்த வேறு பாடு எம் மக்களை ஏன் வஞ்சிக்கின்றனர்..?????
உயிரைத் தொலைத்து வந்தவர்கள் இன்று எதிர்காலத்தை தொலைத்து அகதிகளாக அலைகின்றனர்.

இவற்றைப் பார்க்கக்கூடிய உறவுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் சம்மந்தப்பட்ட உறவுகள் எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழினமே கரம் கொடுங்கள் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள்.

0 Kommentare:

Kommentar veröffentlichen