வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவுடன் சந்திப்பு

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து வடமாகாண கல்வி, கலாசார மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா அவர்களை இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் ஜேர்மன் நாட்டுக் கிளையின் தலைவருமான இ. இராஜசூரியர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றுச் (28.02.2017) சந்தித்துரையாடினர். இதன்போது மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மாநாடும், விழாவும் வெற்றியுடன் சிறப்பாக நடைபெற தனது முழுமையான பங்களிப்பை வழங்குவதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen