முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி கடந்த
முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்
இன்று(சனிக்கிழமை) 11ஆவது நாளாக போராடும் மக்களில் இருவர் சாகும் வரையிலான
உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரிய இந்த போராட்டம் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு, தீர்வு கிடைக்காத நிலையில், போராட்த்தில் ஈடுபட்ட இருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்த்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டனர்.
எனினும், இந்த வீட்டுத்திட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மக்கள், தங்களை தங்களின் பூர்வீக கிராமங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்காக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, தொடர்ந்து 11 நாட்களாகவும் போராடி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரிய இந்த போராட்டம் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு, தீர்வு கிடைக்காத நிலையில், போராட்த்தில் ஈடுபட்ட இருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்த்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டனர்.
எனினும், இந்த வீட்டுத்திட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மக்கள், தங்களை தங்களின் பூர்வீக கிராமங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்காக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, தொடர்ந்து 11 நாட்களாகவும் போராடி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen