முல்லைத்தீவு – கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தின் வடிவத்தை மாற்றும்
நிலைக்கு தம்மை தள்ளவேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தமது போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது போராட்டத்தை அரசியல் தலைவர்கள் கூட கண்டு கொள்வதில்லை என தெரிவிக்கும் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களாக மாதிரிக் கிராமங்களில் வசித்துவரும் மக்கள், தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தமது போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது போராட்டத்தை அரசியல் தலைவர்கள் கூட கண்டு கொள்வதில்லை என தெரிவிக்கும் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களாக மாதிரிக் கிராமங்களில் வசித்துவரும் மக்கள், தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen