ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள இலங்கை
தொடர்பான பிரேரணைக்கு அரசாங்கம் ஒரு போதும் அனுசரணை
வழங்கக்கூடாது. அவ் வாறு வழங்கினால் மீண்டும் இரண்டு வருடங்
களுக்கு சர்வதேசத்தின் பொறியில் இலங்கை சிக்கிவிடும். எனவே ,
அரசாங்கம் இந்த விடயத்தில் இப்போதாவது புத்திசாலித்தனமாக
நடந்துகொள்ளவேண்டும் என்று கூட்டு எதிரணி யின் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதாலேயே 18 மாதங்கள் சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் பொறியில் இலங்கை சிக்கியது. இம்மாதம் 31 ஆம் திகதியுடன் இலங்கை அதிலிருந்து விடுபடுகின்றது. இந்நிலையில் சர்வதேசம் மீண்டும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கையை மற்றுமொரு பொறியில் சிக்க வைக்கும் முயற்சியை முன்னெடுக்கப்போகும் நிலையில் அரசாங்கம் அதிலும் சிக்கிவிடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரிக்கும் நிலையில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான பரிந்துரை உள்ளடங்கிய ஜெனிவா பிரேரனைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எவ்வாறு அனுசரணை வழங்கினார் என்பது புதிராக உள்ளது. அதே தவறை வெளிவிவகார அமைச்சர் இம்முறையும் செய்யத்துடிப்பது தெளிவாகின்றது என்றும் கூட்டு எதிரணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் அடுத்தவாரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதற்கு அனுசரணை வழங்குவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிவயபோதே கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:- புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த பாரதூரமான பரிந்துரைகள் தொடர்பில் அறிந்திருந்தும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதற்கு அனுசரணை வழங்கியிருந்தார். அதன்படி 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் பொறிக்குள் இலங்கை சிக்கியிருந்தது.
அந்தப் பிரேரணையில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான பரிந்துரை உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்பது சாத்தியமற்றது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இந்த விடயத்தை எமது கூட்டு எதிரணியானது 18 மாதங்களுக்கு முன்னரே கூறிவிட்டது என்பதனை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை நிராகரித்துள்ள நிலையில் அவ்வாறான பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ள பிரேரணைக்கு 2015 ஆம் ஆண்டு அமைச்சர் மங்கள சமரவீர எவ்வாறு அனுசரணை வழங்க முடியும்? இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டும்.
அதுமட்டுமன்றி இவ்வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் 2015 ஆம் ஆண்டுக்கான பிரேரணை காலாவதியாகின்றது. அதன்பின்னர் இந்தப் பிரேரணை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ஜெனிவா பொறியிலிருந்து வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ள நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டுமொருமுறை இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றை ஜெனிவாவில் கொண்டுவரவுள்ளன.
அந்தப் பிரேரணையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நீடிப்பாகவே அமையப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்க வைத்திருந்ததைப் போன்று மீண்டும் இரண்டு வருடங்களுக்கு இலங்கையை மற்றுமொரு பொறிக்குள் சிக்கவைக்கவே அமெரிக்காவும், பிரிட்டனும் ஜெனிவாவில் முயற்சிக்கின்றன.
எனவே அந்தப் பிரேரணைக்கு இலங்கை ஒருபோதும் அனுசரணை வழங்கக்கூடாது. ஆனால் தற்போது எமக்கு கிடைக்கின்ற தகவல்களைப் பார்க்கும் போது இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கும் வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு அரசாங்கம் புதிய பிரேரணைக்கு அனுசரணை வழங்குமாயின் அதுவொரு தாண்தோன்றித்தனமான முடிவாகவே அமையும். ஜெனிவாவினதும், சர்வதேசத்தினதும் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தகர்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை பொறிக்குள் சிக்கிவிட இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணிலும் சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தை நிராகரித்துள்ள நிலையில் அவ்வாறானதொரு பரிந்துரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற புதிய பிரேரணைக்கு அரசாங்கம் எந்தவகையிலும் அனுசரணை வழங்கக்கூடாது.
ஒருவேளை புதிய பிரேரணைக்கு ஜெனிவாவில் அரசாங்கம் அனுசரணை வழங்குமாயின் அது அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்கவைப்பதாக அமைந்துவிடும். இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் வெளிவிவகார அமைச்சுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.
கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நிராகரிக்கின்றது. அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாடு இருக்கின்றது. அரசாங்கம் உரிய முறையில் உறுப்புநாடுகள் மத்தியில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் புதிய பிரேரணையை தோற்கடிக்கவும் முடியும்.
காரணம் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான்போன்ற நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால் இலங்கையானது பிரேரணையை நிராகரிப்பதுடன் அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தானாகவே சென்று பொறிக்குள் சிக்கிவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தவிடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆழமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதாலேயே 18 மாதங்கள் சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் பொறியில் இலங்கை சிக்கியது. இம்மாதம் 31 ஆம் திகதியுடன் இலங்கை அதிலிருந்து விடுபடுகின்றது. இந்நிலையில் சர்வதேசம் மீண்டும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கையை மற்றுமொரு பொறியில் சிக்க வைக்கும் முயற்சியை முன்னெடுக்கப்போகும் நிலையில் அரசாங்கம் அதிலும் சிக்கிவிடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரிக்கும் நிலையில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான பரிந்துரை உள்ளடங்கிய ஜெனிவா பிரேரனைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எவ்வாறு அனுசரணை வழங்கினார் என்பது புதிராக உள்ளது. அதே தவறை வெளிவிவகார அமைச்சர் இம்முறையும் செய்யத்துடிப்பது தெளிவாகின்றது என்றும் கூட்டு எதிரணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் அடுத்தவாரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதற்கு அனுசரணை வழங்குவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிவயபோதே கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:- புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த பாரதூரமான பரிந்துரைகள் தொடர்பில் அறிந்திருந்தும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதற்கு அனுசரணை வழங்கியிருந்தார். அதன்படி 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் பொறிக்குள் இலங்கை சிக்கியிருந்தது.
அந்தப் பிரேரணையில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான பரிந்துரை உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்பது சாத்தியமற்றது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இந்த விடயத்தை எமது கூட்டு எதிரணியானது 18 மாதங்களுக்கு முன்னரே கூறிவிட்டது என்பதனை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை நிராகரித்துள்ள நிலையில் அவ்வாறான பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ள பிரேரணைக்கு 2015 ஆம் ஆண்டு அமைச்சர் மங்கள சமரவீர எவ்வாறு அனுசரணை வழங்க முடியும்? இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டும்.
அதுமட்டுமன்றி இவ்வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் 2015 ஆம் ஆண்டுக்கான பிரேரணை காலாவதியாகின்றது. அதன்பின்னர் இந்தப் பிரேரணை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ஜெனிவா பொறியிலிருந்து வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ள நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டுமொருமுறை இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றை ஜெனிவாவில் கொண்டுவரவுள்ளன.
அந்தப் பிரேரணையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நீடிப்பாகவே அமையப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிவரை இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்க வைத்திருந்ததைப் போன்று மீண்டும் இரண்டு வருடங்களுக்கு இலங்கையை மற்றுமொரு பொறிக்குள் சிக்கவைக்கவே அமெரிக்காவும், பிரிட்டனும் ஜெனிவாவில் முயற்சிக்கின்றன.
எனவே அந்தப் பிரேரணைக்கு இலங்கை ஒருபோதும் அனுசரணை வழங்கக்கூடாது. ஆனால் தற்போது எமக்கு கிடைக்கின்ற தகவல்களைப் பார்க்கும் போது இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கும் வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு அரசாங்கம் புதிய பிரேரணைக்கு அனுசரணை வழங்குமாயின் அதுவொரு தாண்தோன்றித்தனமான முடிவாகவே அமையும். ஜெனிவாவினதும், சர்வதேசத்தினதும் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தகர்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை பொறிக்குள் சிக்கிவிட இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணிலும் சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தை நிராகரித்துள்ள நிலையில் அவ்வாறானதொரு பரிந்துரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற புதிய பிரேரணைக்கு அரசாங்கம் எந்தவகையிலும் அனுசரணை வழங்கக்கூடாது.
ஒருவேளை புதிய பிரேரணைக்கு ஜெனிவாவில் அரசாங்கம் அனுசரணை வழங்குமாயின் அது அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்கவைப்பதாக அமைந்துவிடும். இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் வெளிவிவகார அமைச்சுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.
கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நிராகரிக்கின்றது. அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாடு இருக்கின்றது. அரசாங்கம் உரிய முறையில் உறுப்புநாடுகள் மத்தியில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் புதிய பிரேரணையை தோற்கடிக்கவும் முடியும்.
காரணம் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான்போன்ற நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால் இலங்கையானது பிரேரணையை நிராகரிப்பதுடன் அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தானாகவே சென்று பொறிக்குள் சிக்கிவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தவிடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆழமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen