பன்னங்கண்டி போராட்டம் 15வது நாளுடன் முடிவுற்றது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமை பதினைந்தாவது நாள் போராட்டத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
 
நேற்று பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம்  அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் திருமதி மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை  சந்தித்து  காணிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக உறுதியளித்துள்ளனர்.
 
இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதனையடுத்து பதினைந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு  போராட் டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை நேற்று மதியத்துடன் கைவிட்டுள்ளனர்.
 
காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி மக்கள் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
 
இந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில்  குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிரு க்கும் காணி தனியாருக்கு சொந்தமானது. இதனால் அரசின் வீட்டுத்திட்டம், மலசலகூடம் உள்ளிட்ட எவ்வித உதவிதிட்டமும் இன்றி வறுமைக்கு உட்பட்ட  வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே அவர்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த நிலையில் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா எடுத்த முயற்சி காரணமாக காணி உரிமை யாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் திருமதி மாலதிவரனை பன்னங்கண்டிக்கு அழைத்துச் சென்று மக்களுடன் உரையாடியமைக்கு அமைவாக குறித்த பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் திருமதி மாலதிவரன் கருத்து தெரிவிக்கும் போது குறித்த காணி தனது அப்பா, சித்தப்பா உள்ளிட்ட ஏழு பேருக்கு சொந்தமானது.  நான் கிளிநொச்சி  காவேரி கலாமன்றத்திற்கு வேறு விடயம் காரணமாக  வந்தபோது ஊடகவியலாளர் ஒருவரின் தகவலுக்கு அமைவாக அருட்தந்தை யோசுவா எனது கவனத்திற்கு இவ் விடயத்தை கொண்டு வந்தார்.
அதன் அடிப்படையில் நாங்கள் அங்கு சென்று மக்களின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் எனது உறவினர்களுடன் தொடர்ச்சியாக பேசி இணக்கத்திற்குகொண்டு வந்து பன்னங்கண்டி மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
 
இதனையடுத்து பன்னங்கண்டி மக்களின் பிரச்சினை காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன் தீர்வுக்கு வந்துள்ளது. அதன்படி உடனடியாக காணி நில அளவை செய்யப்ப ட்டு அங்கு1990 களிலிருந்து வாழ்கின்ற சுமார் 65 குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது. அத்தோடு அவர்களுக்கான வீட்டுத்திட்டமும் வழங்கப்படும் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
 
 இந்நிலையில் தங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க காரணமாக இருந்த மருத்துவர் மாலதிவரன், அருட்தந்தை யோசுவா மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பன்னங்கண்டி மக் கள் தெரிவித்துள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen