தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களுக்கு
01.03.17யேர்மனிடோட்முண்ட் நகரில் தமிழர்காலாசாலைஅரங்கில் இதய அஞ்சலிகள்
நடைபெற்றது .
தமிழின விடுதலைப் போராட்டத்தினை பல தளங்களில் தனது குரலினால் பலப்படுத்தியவரும், பிட்டுக்கு மண்சுமந்த பாடலை பாடிய குரல் ஓய்ந்தது!!!
ஈழப் போராட்டத்தை வாய்வழியாக பாடி காதுவழியா அனுப்பி போராட்டத்தை வலுவடைய செய்த அந்த ஆரம்பகால/கம்பீரமான/தனிக்குரல் அது…..!!!மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள் முளைப்போம்
இந்த மண்ணில்!
இந்த மூச்சும் உந்தன்
காற்றில் கலந்து
மூட்டும் தீயை கண்ணில்…….
எங்கள் மண்ணின் விடுதலையெழுச்சிக் குரல் இந்த மண்ணை விட்டு உடலாகப் பிரிந்தாலும் விடுதலை பாடல்களாக எம் உயிருடனே கலந்து வாழ்கிறார்.
..இவர் மண்ணுக்காக பாடியபாடல்கள் எல்லாமே பலத்தையும் வளத்தையும் எமது போராட்டத்திற்கு மென்மேலும் வலுச்சேர்த்தவை வீட்டிலிருந்த காலத்தைவிட இவர் எங்களோடு பயணித்த காலங்கள் கூடுதலானவை…
விடுதலைத் தீயீனை
தன் குரலால் வளர்த்தவன்.
இப்போதும் இவன் பாடிய,
‘இந்த மண் எங்களின் சொந்த மண்’
மக்களின் விடுதலை முழக்கமாகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.ஜே.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.10 அளவில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பாடகர் சாந்தனுக்கு இன்று இருதடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.
முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.
1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்……யேர்மனி ட்முண்ட் நகரில் பலர்கலந்து தங்கள் நினைவுகளைப் பகிந்ததுடன் அவர்பாடல்களும் பாடப்பட்டு அவருக்கான அஞ்சலி நிகழ்வு இரவு 8.15 அளவில் நிறைவானது தந்த நிகழ்வில் நிழல்படங்கள் முல்லைமோகன்
–
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


தமிழின விடுதலைப் போராட்டத்தினை பல தளங்களில் தனது குரலினால் பலப்படுத்தியவரும், பிட்டுக்கு மண்சுமந்த பாடலை பாடிய குரல் ஓய்ந்தது!!!
ஈழப் போராட்டத்தை வாய்வழியாக பாடி காதுவழியா அனுப்பி போராட்டத்தை வலுவடைய செய்த அந்த ஆரம்பகால/கம்பீரமான/தனிக்குரல் அது…..!!!மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள் முளைப்போம்
இந்த மண்ணில்!
இந்த மூச்சும் உந்தன்
காற்றில் கலந்து
மூட்டும் தீயை கண்ணில்…….
எங்கள் மண்ணின் விடுதலையெழுச்சிக் குரல் இந்த மண்ணை விட்டு உடலாகப் பிரிந்தாலும் விடுதலை பாடல்களாக எம் உயிருடனே கலந்து வாழ்கிறார்.
..இவர் மண்ணுக்காக பாடியபாடல்கள் எல்லாமே பலத்தையும் வளத்தையும் எமது போராட்டத்திற்கு மென்மேலும் வலுச்சேர்த்தவை வீட்டிலிருந்த காலத்தைவிட இவர் எங்களோடு பயணித்த காலங்கள் கூடுதலானவை…
விடுதலைத் தீயீனை
தன் குரலால் வளர்த்தவன்.
இப்போதும் இவன் பாடிய,
‘இந்த மண் எங்களின் சொந்த மண்’
மக்களின் விடுதலை முழக்கமாகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.ஜே.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.10 அளவில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பாடகர் சாந்தனுக்கு இன்று இருதடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.
முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.
1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்……யேர்மனி ட்முண்ட் நகரில் பலர்கலந்து தங்கள் நினைவுகளைப் பகிந்ததுடன் அவர்பாடல்களும் பாடப்பட்டு அவருக்கான அஞ்சலி நிகழ்வு இரவு 8.15 அளவில் நிறைவானது தந்த நிகழ்வில் நிழல்படங்கள் முல்லைமோகன்
–
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 Kommentare:
Kommentar veröffentlichen