மரண அறிவித்தல் செல்வி நித்திலா ஜெகதீசன்

செல்வி நித்திலா ஜெகதீசன்

இறப்பு : 5 ஏப்ரல் 2017
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரெட்ணராஜா ஜெகதீசன் குலமாது தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சிற்பரன்(கனடா) அவர்களின் ஆருயிர் தங்கையும்,

லக்மணிசிற்பரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தரணியா, தியானா அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற தம்பையா ரெட்ணராஜா, ராசமணி ரெட்ணராஜா, காலஞ்சென்ற வேலயுதர் சதாசிவம், பாலமணி சதாசிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெற்றோர் — இலங்கை
தொலைபேசி:     +94112591179
சகோதரன் — கனடா
தொலைபேசி:     +14168443581

0 Kommentare:

Kommentar veröffentlichen