மரண அறிவித்தல் திரு சரவணமுத்து தாமோதரம்

திரு சரவணமுத்து தாமோதரம்
(சரா மாஸ்டர், இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். பரியோவான் கல்லூரி)
மலர்வு : 13 சனவரி 1927 — உதிர்வு : 8 ஏப்ரல் 2017
  

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தாமோதரம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. தாமோதரம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அபிராமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேசினி, விஸ்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலா, பத்மா, மற்றும் Dr. மீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மண்டலேஸ்வரன், Dr. அமரசிங்கம், திருச்செல்வம், மற்றும் Dr. மகேந்திரா, சோமா நாஸ், திலகவதி ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதீசா, சந்தியா, சாயி சுப்பிரியா, அகிலேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாமோதரம்பிள்ளை வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:    +94213006649

0 Kommentare:

Kommentar veröffentlichen