இறந்த இந்த மழலைக்காய் வேண்டுவோம்

திருகோணமலையும் டெங்கு அபாயமும்
______________________________________

உயிர்கொல்லி நோய் ஒன்று
உச்சமாய் பரவுகிறது
எம்பிரசேத்தில் அதிகளவில் பாதிப்பு
எத்தனையோ பாதுகாப்பு செய்திடினும்
பரவி வருவது பாரியளவில் தொடர்கிறது.

மழலை என்ன முதியோர் என்ன
இளைஞன் கூட மரணம்
மரணபயம் சூழ வாழ்கிறோம் நாமும்.

ஏன் இந்த அவலம்
என்ன தான் தீர்வு
வைத்தியசாலை நிரம்பி வழிகிறது
வைத்திய அதிகாரிகள் பரபரப்பு

முற்றிலும் மக்கள் பீதி
முதன்மைக்காரணம் நுளம்புதானாம்
ஆனாலும் சந்தேகம் எனக்கிங்கே
இவ்வளவு காலமும் இல்லையா நுளம்பிங்கே

ஆண்டவா அநியாய சாவு எதற்காக
ஆனந்தமாய் சரித்த பூவை பறித்தது எதற்காக
பாரிய தாக்கம் கோணேஸ்வரர் பூமியில் நோயினா
தீர்வுதான் என்னவோ

இறந்த இந்த மழலைக்காய் வேண்டுவோம்
சிவரமணி கவி கவிச்சுடர் சிவரமணி கவிதைகள்

0 Kommentare:

Kommentar veröffentlichen